பிரபல இயக்குனரின் காதல் காவியத்தில் நடிக்கவுள்ள சிம்பு.! ஹிட் கன்ஃபார்ம்.!
Simbu next movie with ashvath marimuthu
சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து இருப்பார். வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பிரேம்ஜி அமரன், கருணாகரன், சந்திரசேகர் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா போன்ற முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் வித்யாசமான கதையை கொண்டிருப்பதால் மிகவும் சுவாரசியமாக இருந்தது.
அடுத்ததாக நடிகர் சிம்பு வெந்து தனிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இத்தகைய நிலையில், 'மாநாடு' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
இயக்குனர் அஷ்வத் மரிமுது தனது முதல் படமான ஓ மை கடவுளே படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். அடுத்ததாக சிம்புவை வைத்து ஒரு காதல் காவியத்தை அவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. எப்படியும் விட்டுக் கொடுப்பார் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது.
English Summary
Simbu next movie with ashvath marimuthu