மீண்டும் நயன்தாராவுடன் காதலா.? சர்ச்சை நாயகனின் சமரசமில்லாத பேச்சு..!! கடுப்பான ரசிகர்கள்.!
simbu about relationship of nayanthara
தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமானதை, காட்டிலும் சர்ச்சை பேச்சுகளில் சிக்கி அனைவராலும் அதிகம் பேசப்பட்டவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் உடல் எடையை குறைத்து மீண்டும் மன்மதன் சிம்புவாக களத்தில் இறங்கியுள்ளார். அந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
எப்போதும் இவர் மீது பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கும், ஆனால், அதையெல்லாம் இவர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. யார் என்ன சொன்னாலும் கூலாக அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்து வந்தார். முன்னதாக இவருக்கும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர் பின் இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதன் பின்னர், சிம்பு தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டியை கரெக்ட் செய்துவிட்டார் என்றும், பின்னர் அதெல்லாம் பொய் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்த நடிகர் சிம்புவிடம் முன்னாள் காதலியான நயன்தாரா மீண்டும் அவரது காதலை தங்களிடம் வெளிப்படுத்தினால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கும் அவர் மிகவும் கூலாக நாங்கள் இப்போதும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். நண்பர்களாக மட்டுமே இருக்கும் வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
English Summary
simbu about relationship of nayanthara