சிம்புவுக்காக காத்திருக்கும், செம்பருத்தி சீரியல் நடிகை..! திருமணம் குறித்து ஓபன் டாக்.!  - Seithipunal
Seithipunal


சினிமா துறையில் திரைப்படங்கள், தொடர்கள் என்று பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இருப்பினும், இல்லதரசிகள் அதிகப்படியாக விரும்பி பார்ப்பது சீரியல்களை தான். இதற்கு காரணம் குடும்பத்தில் நடக்கும் சண்டை, சச்சரவு, பிரச்சினைகள், காதல் என்று அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை கொண்டு எடுக்கப்பட்டிருப்பது தான், அவர்களை ஈர்க்கும் முக்கிய காரணியாகும். அதிலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்தவை ஆகும். 

செம்பருத்தி சீரியல் தான் அவர்களின் ஆஸ்தான தொடராக கருதப்படுகிறது. இதில் வரும் ஆதி பார்வதி என்ற இரண்டு கதாபாத்திரங்கள் மிக மிக பிரபலமானவை. பார்வதியாக அந்த சீரியலில் நடிக்கும் நடிகை ஷபானா சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் பிடிக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு எனக்கு விஜய் பிடிக்கும். 

ஆனால், விஜய் மட்டுமல்ல. சிம்புவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரைப்போல கெத்தாக இருக்கும் ஒருவரை தான் நான் திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். எனக்கான சிம்புவிற்கு நான் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சமீபகாலமாகவே சிம்புவும் திருமணத்திற்கு பெண் தேடி வருகின்றார். ஏதாவது நல்ல காரியம் நடக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் காண வேண்டும். 

அத்துடன் நடிகை ஷபானா அஜித் மற்றும் விஜய் ஆகிய நடிகர்களுக்கு தங்கச்சியாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை என்று தெரிவித்துள்ளார். மேலும், அஜித்தும், நானும் ஒரே நிறம் என்பதால் அவருக்கு தங்கச்சியாக நான் நடிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SEMBARUTHI ACTRESS SPEECH ABOUT SIMBU


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->