யாருக்காகவும், செய்யாததை ஆர்யாவுக்காக செய்வேன் - உறுதியளித்த சந்தானம்.! - Seithipunal
Seithipunal


பாஸ் என்கிற பாஸ்கரன் 2 திரைப்படம் எடுக்கப்பட்டால் ஆரியாவுக்காக அதில் நிச்சயம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று கேப்டன் பட விழாவில் நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானம் மற்றும் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சில மாதங்களுக்கு முன் பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு கொடுத்தது. 

தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் சந்தானம் நகைச்சுவை நடிகராக நடிப்பாரா என்ற கேள்வி ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், நடிகர் ஆர்யா நடித்த கேப்டன் பட விழாவில் சந்தானம் பேசியபோது, "ஆர்யா எனக்கு ஒரு சிறந்த நண்பர். என்னிடம் சிலர் தங்களது படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கவும், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கவும் கோரிக்கை வைத்தனர். 

ஆனால் அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. இப்பொழுது கூறுகிறேன். நடிகர் ஆர்யா பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் எடுத்தால் நான் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பேன். நான் காமெடியனாக நடித்துக் கொண்டிருந்தபோது ஆர்யா உடற்பயிற்சி செய்யச் சொல்லி என்னை வற்புறுத்துவார். அவர் பணம் போட்டு கேப்டன் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை அனைவரும் பாருங்கள்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Santhanam speech about Boss engira bhaskaran 2


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->