இனிமே என் ரூட்டே தனி.. தனது முடிவை ஓபனாக கூறிய சமந்தா.!  - Seithipunal
Seithipunal


இனி எனது படங்களில் கவர்ச்சி காட்டுவதை நிறுத்திவிட்டு, திறமையை காட்ட போகிறேன் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். 

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருகின்ற சமந்தா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சென்னை பல்லாவரம் பகுதியை பூர்வீகமாக கொண்ட நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். 

செம ஹாட்டான லுக்கில் சமந்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.!! - Seithipunal

திருமணத்திற்குப் பின்னர் கூட நடிகை சமந்தா தொடர்ந்து தனது கெரியரில் சாதித்து வருகின்றார். மேலும், தற்போது வெப் சீரிஸ்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் படங்கள் மட்டுமின்றி சீரிஸ்களுக்கும் ஆர்வம் காட்டி வருகின்றார். 

தி ஃபேமிலி மென் தொடரில் நடித்து வருகின்ற சமந்தா சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், "சினிமாவிற்கு நான் வந்த புதிதில் எனக்கு கவர்ச்சி கதாப்பாத்திரங்களில் நடிக்க தான் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்தநிலை மாறியுள்ளது. பத்துவருடமாக இந்த துறையில் பணியாற்றி வருகின்றேன். படங்களில் கவர்ச்சி காட்டுவதை நிறுத்திவிட்டு, திறமையை காட்டும் விதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SAMANTHA SPEECH ABOUT HIS INDUSTRY LIFE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->