விஜயை தான் காதலிக்கிறேன்.! ஆனா, கல்யாணம் மட்டும் அவங்களோட தான்.!- ராஷ்மிகா ஒபன் டாக்.!
rashmika says about vijay
நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அந்த படத்தில் வரும் இன்கேம் இன்கேம் பாடல் பிரபலமானதை தொடர்ந்து அவர் இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தார்.
அதன் பின்னர், மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்து இருந்தார். தமிழில் நடிப்பதற்கு முன்பாகவே தமிழ் ரசிகர் பட்டாளம் இவருக்கு உண்டு. தற்போது கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற படத்தில் ராஷ்மிகா நடித்து வருகின்றார்.
தெலுங்கு பட விளம்பரம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம் நண்பராகவும், காதலராகவும் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்டதற்கு நடிகர் மிதுனை நண்பராகவும், நடிகர் விஜய்யை காதலராகவும் தேர்வு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது ராஷ்மிகா, "நடிகர் விஜய்யை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் மீது எப்போதும் எனக்கு ஒரு காதல் உண்டு. விஜயுடன் சேர்ந்து நடிக்கும் நாளை நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார். எந்த நடிகர் கணவராக வரவேண்டும் என்ற கேள்விக்கு ராஷ்மிகா பதிலளிக்க மறுத்துவிட்டார்.மேலும், தான் ஒரு தமிழ் நடிகை தான் திருமணம் செய்ய விரும்புகிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
rashmika says about vijay