ரஜினியின் இல்லத்தில் திடீர் போராட்டம் செய்த திருநங்கைகள்.. அதிர்ச்சியான குடும்பத்தினர்.!! - Seithipunal
Seithipunal


கரோனா அச்சத்தின் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கான நாடுதழுவிய ஊரடங்கு அமலாகியுள்ளது. இதனால் பலரும் தங்களின் அன்றாட பணியை இழந்து தவித்து வரும் நிலையில், பல நபர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்திற்கு பல திரையுலக நட்சத்திரங்கள் உதவி செய்து வந்தனர். 

நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்திற்கு ரூ.50 இலட்சம் பணம் வழங்கி உதவி செய்தார். இந்த நிலையில், சென்னையில் உள்ள போயஸ் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்ற 8 திருநங்கைகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இவர்கள் அனைவரும் சேர்ந்து ரஜினிகாந்தின் இல்லத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இதனால் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதனையடுத்து ரஜினிகாந்தின் மனைவி லதா வீட்டின் காவலாளி மூலமாக ரூ.5 ஆயிரத்தை திருநங்கைகளிடம் வழங்கியுள்ளார். 

இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து சென்ற நிலையில், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth wife gives 5 thousand rupees for transgender due to create violence in house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->