புஷ்பா படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. கொந்தளிக்கும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமூக வலைதளங்களில்  வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள புஷ்பா ரூ. 250 கோடி செலவில் ஆந்திராவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியாகியுள்ளது. கன்னட மொழியில் டப்பிங் செய்யப்படவில்லை எனக் கூறப்படும். இதனால் ஆத்திரமடைந்த கன்னட மொழி மக்கள் படத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். 

மேலும், தெலுங்கு மொழிகளில் எடுக்கப்படும் படங்களில் குப்பை கொட்டும் தளமாக கர்நாடகா.? நீங்கள் எந்த மொழியிலும் படம் எடுங்கள், அவை கர்நாடகாவில் ரிலீஸ் செய்யப்பட்டால் கன்னடத்தில் டப்பிங் செய்த படமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pushpa movie release issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->