ஆஸ்கருக்கு காத்திருந்த 'இரவின் நிழல்'.. குஜராத் படத்திற்கு சென்ற விருது.. பார்த்திபன் போட்ட ட்வீட்.!
parthiban about oscar awards to gujrat movie Shello Show
95வது ஆஸ்கர் விருது, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில், 2023ஆம் ஆண்டு மார்ச்12 ஆம் நாள் நடைபெறவுள்ளது. குஜராத்தி இயக்குநரான பான் நிலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஷெல்லோ ஷோ’ என்ற திரைப்படம் 95வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில், சிறிய கிராமத்தில் இருக்கும் சிறுவனுக்கு திரைப்படம் மீதான காதல் படமாக எடுக்கப்பட்டது. இதில் பவின் ரபாரி, ரிச்சா மீனா, பவேஷ் ஸ்ரீமலி, திபன் ராவல், பரேஷ் மேக்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படம் 2021இல் டிரிபிகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இது ஏற்கனவே, 2021இல் வல்லடோலிட் சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் ஸ்பைக் விருது பெற்றது. இந்த திரைப்படம் அக்டோபர் 14ஆம் நாள் திரையரங்கில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கருக்கு செல்லும் குஜராத்தி படம் குறித்து இயக்குனர் பார்த்திபன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "மகிழ்ச்சி! எந்த கூடுதல் சிபாரிசும் தேவையில்லாமல் ஆஸ்காருக்கு இந்தியாவிலிருந்து அனுப்பத் தகுதியான ஒன்றிரண்டு படங்களில் ஒன்று. ‘செலோ ஷோ’ குஜராத்தி படம். (சினிமா பாரடைசோ பாதிப்பில்) பிலிம் டு டிஜிட்டல் என்ற விஞ்ஞான வளர்ச்சியில் சிக்குண்ட சில உள்ளங்களில் என்னுடையதும் ஒன்று.
அதை ஒரு சிறுவனை வைத்து நம் இதயத்தை சில்லு சில்லாக உடைத்து, கடைசியில் ‘தி லைட் ஆப் ஹோப்’ அவன் கண் வழிய நாம் காணும்படி செய்த இயக்குநர் திரு‘பான் நாலின்’ அவர்களுக்கு வாழ்த்துகள். திறமை எங்கிருந்தாலும் அதை உலகின் முதல் ஆளாய் திறந்த மனதோடு வரவேற்று வாழ்த்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் என்று அவர் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இந்த குஜராத்தி படத்திற்கு ஆஸ்கர் வழங்கப்பட்டுள்ளது குறித்து அவர் என்ன கூறுவார் என்று அனைவரும் எதிர்பாத்திருந்த நிலையில், அவர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
parthiban about oscar awards to gujrat movie Shello Show