ஆயிரத்தில் ஒருவன்.. தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷை மோகன்.ஜி பாராட்டி ட்வீட்.!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களுக்கு மத்திய அரசு திரைப்பட கலைஞர்களை பாராட்டி கௌரவித்து விருதுகளை வழங்கி வருகிறது. 

ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கும், அந்த துறையின் சிறந்த விருதுகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுகிறது. இதில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 21 வரை சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

2020ம் ஆண்டு வெளியான சூரரை போற்று திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட 5 விருதுகளை சூரரை போற்று திரைப்படம் பெற்றுள்ளது.

ஜிவி. பிரகாஷிற்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து அவரது ரசிகர்கள், திரையுலகத்தினர் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் திரௌபதி இயக்குனர் மோகன்.ஜி,ஜிவி. பிரகாஷிற்கு தேசிய விருது கிடைத்ததை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில், " இந்த விருது கிடைத்ததற்கு ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்துக்கள். ஆயிரத்தில் ஒருவரான நீங்கள் இதற்கு தகுதியானவர்." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mohan G wishes to GV prakash award


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->