"நயன்-விக்கி தம்பதியை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீங்க" செய்தியாளர்களுக்கு மா.சு அறிவுரை.!  - Seithipunal
Seithipunal


நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாயின் மூலமாக குழந்தை பெற்ற மருத்துவமனையுடைய பெயரை நீங்கள் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

இன்று சென்னை தேனாம்பேட்டை பகுதியில் மனநல சேவை மையத்தை துவங்கி வைத்த அமைச்சர் மா சுப்பிரமணியன் 14416 என்ற அவசர மனநல உதவி எண்ணை அறிமுகப்படுத்தி இருக்கின்றார். அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார். 

அப்போது அவரிடம் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்ற நயன்தாரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியன், "வரும் நவம்பர் மாதம் முதல் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய சட்டம் அமலுக்கு வர உள்ளது. 

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றுக் கொண்ட மருத்துவமனையின் பெயரை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியை மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருங்கள். நாகரீகமாக செயல்படுங்கள்." என்று செய்தியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister support to nayanthara and vignesh sivan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->