ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. தலைவலியில் படக்குழு.!
Malayalam director case filed against Jailor movie
தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினியுடன், மோகன்லால், ஜாக்கி ஷரப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படிப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் தலைப்பை மாற்றக்கோரி மலையாள இயக்குனர் ஷக்கீர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெய்லர் என்ற தலைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் இந்த படத்திற்கான பணிகள் தொடங்கியது.
இதனையடுத்து கடந்த ஜூன் 26ம் தேதி படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையாளத்தில் ஜெயிலர் திரைப்படத்தை வெளியிடும்போது தலைப்பை மாற்றி வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 2ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. தற்போது இந்த வழக்கு ஜெயிலர் படக்குழுவினருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Malayalam director case filed against Jailor movie