ஆரியால் புல்லரித்து போகும் பிரபல இசையமைப்பாளர்.! வெளிப்படையாக கூறிய ஸ்டேட்மென்ட்.!
james vasanthan sapports to aari
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆரி குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், "இவனப்பத்தி எழுதுனது போதும்னு நெனச்சாலும் விடமாட்டேங்குறானே!
வெளியேறிய Housemates எல்லாரும் உள்ள வந்துட்டாங்க. பாலாவுக்கு இருப்புகொள்ளல. எல்லார்கிட்டாயும் ஒக்காந்து ஒக்காந்து கேக்குறாரு.. "வெளிய என்னப்பத்தி என்ன நெனக்கிறாங்க.. positive-ஆ negative-ஆ.. பேரு ரொம்ப கெட்டுப்போச்சா.. ஆரியப்பத்தி என்ன சொல்றாங்க?" அப்படின்னு தவிக்கிறாரு.
அந்தப் பாசக்குடும்பத்தப் பத்தி சொல்லவே வேணாம். நமக்கு எதுவும் காட்டப்படல. ஆனா அத எப்ப எப்படி தன்னோட பிள்ளைகளுக்குச் சொல்லணும்னு நல்லதங்காளுக்காத் தெரியாது? எல்லாம் சொல்லிருக்கும்.
இந்த மனுஷன் அமைதியா ஒக்காந்துருக்கான். எதப்பத்தியும் கவலப்படல. அதை சொல்லத்தொடங்குன நிஷாவையும், "எனக்கு எதுவும் சொல்லவேணாம். நல்லதும் வேணாம், கெட்டதும் வேணாம். அது எனக்கும் நல்லதுல்ல.. மத்தவங்களுக்கும் நியாயமா இருக்காது" அப்படின்னுட்டான்.
நீ எப்படிடா இப்படி வளந்த..?" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
james vasanthan sapports to aari