ஷூட்டிங் இல்லையென்றால் சில்க் ஸ்மிதா என் வீட்டிற்கு வந்து விடுவார் - கங்கை அமரன் ஓபன் டாக்.!
Gangai Amaran speech about Actress Silk Smitha
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் நிறைய ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். பிரபல நடிகையாக வலம் வந்த இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் பிரபல இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பாடகருமான கங்கை அமரன் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா குறித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் பேசியதாவது, நானும் சில்க் ஸ்மிதாவும் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஷூட்டிங் இல்லை என்றால் அவர் என்னுடைய வீட்டிற்கு வந்து விடுவார். மேலும் எனது மனைவியுடன் சேர்ந்து சமையல் செய்து சந்தோஷமாக இருப்பார்.
அப்போது எனது மகன் பிரேம்ஜி சிறிய குழந்தையாக இருந்தான். அவனை நான் திருமணம் செய்து கொள்ளட்டுமா என்று சில்க் ஸ்மிதா விளையாட்டாக கேட்பார். நானும் திருமணம் செய்து கொள் என்று கூறுவேன். அதுமட்டுமில்லாமல் பிரேம்ஜியை பார்க்கும் போதெல்லாம் சில்க் ஸ்மிதா ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொள்வார். அவர் இறந்த செய்தியை கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன் ஒரு வாரம் எனக்கு உடல் நிலையை சரியில்லாமல் போனது என கூறியுள்ளார்.
English Summary
Gangai Amaran speech about Actress Silk Smitha