அதிர்ச்சி - லியோ வெற்றிவிழா நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பும் பின்பும் பல சர்ச்சைகள் எழுந்தது. 

இந்த நிலையில், ‘லியோ’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக இந்த இடத்தில தான் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தத் திட்டமிட்டு பின்பு ரத்தானது. 

அந்த இடத்திலேயே மீண்டும் படத்தின் வெற்றி விழா நடக்கிறது என்று இந்த செய்தியை ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கட்டுப்பாடாக, ‘லியோ’ சக்சஸ் மீட்டுக்கு வருபவர்கள் என்ட்ரி பாஸ் உடன் தங்களது ஆதார் அட்டையையும் அவசியம் எடுத்து வந்தால் மட்டுமே நேரு உள்விளையாட்டு அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதுமட்டுமல்லாமல், நாளை மாலை நான்கு மணி முதல் ரசிகர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நாளை நடைபெற உள்ள லியோ திரைப்பட வெற்றி விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும், அதே நேரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fans not allowed in leo movie victory ceremony


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->