லியோ வெற்றி விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. லியோ திரைப்பட வெற்றி விழாவில் கலந்து கொள்பவர்களுக்கும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த விழாவில் விஜய் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கக்கூடிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் லியோ திரைப்பட வெற்றி விழா கொண்டாடப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட தலைவர்கள், மாநகர, நகர, வட்ட, வார்டு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் என 6 ஆயிரம் பேர் இந்த வெற்றி விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்கள் மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் விஜய் மக்கள் இயக்க அடையாள அட்டை, ஆதார் அட்டை கொண்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது.

அதன் அடிப்படையில் மட்டுமே நாளை நடைபெறும் லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்ள நேரு விளையாட்டு அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். உறுப்பினர்கள் அல்லாத விஜய் ரசிகர்கள் இந்த வெற்றி விழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விஜய் ரசிகர்கள் நேரு விளையாட்டு அரங்கிற்கு வர வேண்டாம் என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fans are not allowed at Leo victory celebration


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->