மாரி செல்வராஜின் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா.? விரைவில் படப்பிடிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோரை வைத்து பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் ரசிகர்களுடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் மூலம் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரானார்.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பகத் பாஸில் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்த உதயநிதி ஸ்டாலினை விட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாசிலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரமின் மகனான துருவ் விக்ரமை வைத்து கபடியை மையமாகக் கொண்டு புதிய திரைப்படம் ஒன்றை மாறி செல்வராஜ் இயக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Druv Vikram in Mari selvaraj movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->