போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த்திற்கு ஜாமீன் மனு கிடைக்குமா? - Seithipunal
Seithipunal


கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு வருகிற 7-ந்தேதி வரை,போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு முன்னதாக, கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்டபோது, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜாமின் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

மேலும்,'வெளிநாடு செல்லமாட்டேன். வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்' என்றும் உறுதியளித்தார். ஆனால் ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அறிவுரை வழங்கினார்.

இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drug case Will Srikanth get bail


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->