தனக்கு வாழ்க்கை கொடுத்தவரை கைவிட்ட சூர்யா.?! அடக்கடவுளே.!
did you know actor surya say no to his mentor and faourite director
நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சூர்யா. இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் அவர் இணைந்து நடித்திருப்பார். அந்தத் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் மறைந்த இயக்குனர் கே.வி ஆனந்த். நடிகர் சூர்யாவிற்கு ஆரம்ப காலத்திலிருந்து வழிகாட்டியாக இருந்தவர் கே.வி ஆனந்த்.
சூர்யாவை வைத்து இவர் இயக்கிய அயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து மாற்றான் மற்றும் காப்பான் ஆகிய திரைப்படங்களையும் சூர்யாவை வைத்து இயக்கியிருந்தார். சூர்யாவின் முதல் படத்திற்கு ஒளிப்பதிவாளராக இருந்த இவர் கடைசியாக இயக்கிய திரைப்படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நம்மை வளர்த்து விட்டவர்களுக்கே சில நேரம் நம்மால் உதவ முடியாமல் போகலாம். நிஜ வாழ்க்கையில் இது நடக்கிறதோ நடக்கவில்லையோ ஆனால் சினிமாவில் இது அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்று. இந்த விஷயம் நடிகர் சூர்யாவுக்கு அடிக்கடி நடந்திருக்கிறது. கே வி ஆனந்த் இயக்குனராக அறிமுகமான படம் கனா கண்டேன். இந்தத் திரைப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் கோபிகா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவை தான் வில்லனாக நடிக்க கேட்டிருக்கிறார் கே.வி.ஆனந்த். சூர்யா ஹீரோவாக வளர்ச்சி பெற்று கொண்டிருந்த நேரம் அது. அதனால் இப்போது வில்லனாக நடிப்பது சரியாக இருக்காது எனக் கூறி மறுத்திருக்கிறார். கே வி ஆனந்திடம் மட்டுமல்லாது கௌதம் மேனன் மற்றும் ஹரி ஆகியோரின் சில திரைப்படங்களையும் சூர்யா மறுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
did you know actor surya say no to his mentor and faourite director