கூல் சுரேஷ் - பிரதீப்புக்கு இடையே முற்றிய சண்டை - பரபரப்பில் பிக் பாஸ் வீடு.! - Seithipunal
Seithipunal


தமிழில் பிக் பாஸ் 7 சீசன் தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த போட்டியில் இதுவரைக்கும் மூன்று போட்டியாளர்கள் வெளியில் சென்ற நிலையில், தற்போது வைல்ட் கார்டு போட்டியாளர்கள் ஐந்து பேர் உள்ளே நுழைந்தவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. 

வந்த முதல் நாளே வைல்ட் கார்டு போட்டியாளர்களை சுமால் பாஸ் வீட்டிற்குள் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், பிரதீப் - கூல் சுரேஷ்க்கு இடையே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. 

அந்த வகையில், இன்று காலை வெளியான முதல் புரோமோவிலேயே பிரதீப் மரியாதைக் குறைவாக நடத்துவதாகச் சொல்லி கூல் சுரேஷ் பெட்டி படுக்கையுடன் வீட்டை விட்டு வெளியேறும்படி காட்டப்பட்டு இருந்தது.

மேலும், பிரதீப் - கூல் சுரேஷூக்கு இடையில் வார்த்தைப் போர் முற்றி "சில்ற பையன்", செருப்பால் அடிப்பேன், "வாடா போடா" என்ற ரீதியில் பிரதீப் கூல் சுரேஷிடம் பேசும்படியாக வந்துள்ளது. பிரதீப் இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்கச் சொல்லி சக போட்டியாளர்கள் சொல்ல, ‘அதெல்லாம் முடியாது’ என்று தெனாவெட்டாக பதில் சொல்கிறார் பிரதீப். 

ஏற்கெனவே, இதுபோன்று விஜய் வர்மா பேசி இந்த சீசனில் மஞ்சள் கார்டு வார்னிங் வாங்கி இருந்தார். பிரதீப்பும் கமலிடம் இருந்து எச்சரிக்கை வாங்கிய பின்பும் இவ்வாறு பேசியிருப்பது நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cool suresh and pradeep fight in bigg boss house


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->