வைரமுத்துவை தொடர்ந்து அசிங்க படுத்தும் சின்மயி...! மீண்டும் ஒரு பகிரங்க ட்விட்..!  - Seithipunal
Seithipunal


முன்னதாக பாடகி சின்மயி தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கவிஞர் வைரமுத்துவின் மீது புகார் அளித்து இருந்தார். அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே வைரமுத்து இரு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். அதாவது ஆண்டாள் பற்றிய சர்ச்சையான கருத்தை தெரிவித்ததற்கு பாரதிய ஜனதா மற்றும் பல இந்து அமைப்புகள் அவருக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது.

அதேபோல் சின்மயி தன் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சித்ததாகவும் புகார் அளித்திருந்தார். ஆனால் வைரமுத்து நான் எந்தவொரு தவறையும் செய்யவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய் என்று கூறி இதை சட்ட ரீதியில் அணுக நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் சின்மயி வைரமுத்துவை கடுமையாக தாக்கி சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வைரமுத்து ஒரு மேடையில் பாலியல் அத்துமீறல்களுக்கு காரணமாக இருக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். அவரின் அந்த கருத்துக்கு ட்விட் செய்த சின்மயி இது இருபது வருடங்களுக்கு முன்னரே நடந்திருந்தால் நாங்களாவது தப்பித்திருப்போம்ல என்று ட்வீட் போட்டு இருந்தார். இது சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chinmayi tweet about vairamuthu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->