அசீம் மற்றும் விக்ரமனை வீட்டை விட்டு வெளியேற்றிய பிக்பாஸ்.!  - Seithipunal
Seithipunal


தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால், தான் பிக் பாஸ் சீசன் 5 முடிந்து, 6வது சீசன் வரை வந்துள்ளது. எப்போது 6 வது சீசன் ஆரம்பிக்கும் என்று காத்திருந்த நிலையில், அக்டோபர் 9ம் தேதி பிக் பாஸ் தொடங்கியது. 

20 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலில் நிறைய சண்டை சச்சரவுகள் இருந்து வருகின்றன. இதில் 21ஆவது போட்டியாளராக மைனா நந்தினி உள்ளே நுழைந்தார். இதன் பின்னர் பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிடித்த நபர் ஆக இருந்த ஜி பி முத்து தானாகவே வெளியேறினார். 

தனது குடும்பத்தை பிரிந்து தன்னால் இருக்க முடியவில்லை என்று கூறிவிட்டு அவர் வெளியேறினார். மேலும், முதல் வார எவிக்ஷனில் சாந்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது 19 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன், ஆயிஷா உள்ளிட்டோர் சண்டையிட்டுக் கொள்கின்றனர். 

சமீபத்தில் விக்ரமன் மற்றும் அசீம் இருவருக்கிடையில் அரசியல் குறித்த பேச்சு வார்த்தையும் கொந்தளிப்பும் ஏற்பட்டு சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில், பிக் பாஸ் டாஸ்க்கில் அஸீம் மற்றும் விக்ரமன் இருவரும் ஒழுங்காக செயல்படவில்லை என்று பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர்களை சிறைக்கு அனுப்பியுள்ளார் பிக் பாஸ். இது குறித்த புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggboss give aseem and vikraman to jail


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->