இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவர்தான்.! வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த மொழியில் வெளியாகினாலும் அதற்கு அந்தந்த மொழிகளில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.  அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால்தான் வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து பிக் பாஸ் 5 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. 

18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது பல்வேறு எலிமினேஷன்கள் நடைபெற்றது. மேலும், வைல்டு கார்டு எண்ட்ரீயும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் அபினய் எலிமினேஷன் ஆனார்.

தற்போது மொத்தம் 18 போட்டியாளர்கள் மற்றும் 2 வைல்ட் கார்ட் என்ட்ரி என 20 பேர் கலந்துக்கொண்ட போட்டியாளர்களில் தற்போது, ராஜு, அக்ஷரா, பாவனி, சிபி, தாமரை, நிரூப், வருண், ப்ரியங்கா, சஞ்சீவ், அமீர் உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வார எலிமினேஷன் பட்டியலில் பாவனி, நிரூப், வருண், அக்ஷரா, ப்ரியங்கா மற்றும் சிபி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், இதுவரை பதிவாகியுள்ள ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் பாவனி மற்றும் அக்ஷரா குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர்களில் ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss 5 this week Eviction


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->