முடிவுக்கு வந்த பாரதி கண்ணம்மா சீரியல்.! கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழு.!
bharathi kannamma serial may stop soon
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகின்ற பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களுக்கு நிறைய இல்ல தரிசிகளின் ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இதில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பலரும் மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதற்கு காரணம் ரோஷினியின் நடிப்பு என்று கூறலாம். ஏனெனில் கண்ணம்மாவாக அவர் கொடுத்த பர்பாமன்ஸ் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பதிந்து விட்டது. அதன் பின்னர், வின்ஷா தேவி வந்தபோது ரோஷினி சீரியலில் இருந்து விலகியது கஷ்டமாக இருந்தாலும் முகபாவனைகளில் பெரிதளவு வித்தியாசம் இல்லை என்ற காரணத்தால் அப்படியே ஏற்றுக் கொண்டனர்.
இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் கணவன் மனைவியாக இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பாரதி தனது தோழியான வெண்பாவை தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கும் நிலையில் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துக் கொள்ளவும் அவர் ஏற்பாடு செய்துவிட்டார்.
இந்த முடிவுகள் வெளியானால் அவர் கண்ணம்மாவுடன் சேரும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே சீரியல் முடியப்போவதாக கூறப்பட்டு வருகின்றது.
இத்தகைய சூழலில் இந்த சீரியலின் முடிவை முன்னிட்டு சீரியல் குழுவினர் கேக் வெட்டி செலிப்ரேட் செய்ததாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஆனால், இது குறித்து உண்மை தன்மை எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
bharathi kannamma serial may stop soon