25 வருடங்களுக்குப் பிறகு... ஏ.ஆர்.ரஹ்மான்-பிரபு தேவா! உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் பிரபுதேவா மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இருவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு புதிய திரைப்படம் ஒன்றில் இணைந்துள்ளார்கள். 

மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் பிரபுதேவா, யோகி பாபு, அர்ஜுன் அசோகன் ஆகியோர் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றனர். 

இவர்களுடன் ரெடி கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, தீபா ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படம் ஏ ஆர் ரகுமான் மற்றும் பிரபுதேவா இணையும் 6ஆவது திரைப்படமாகும். 

இருவரும் முதன்முறையாக கடந்த 1994 ஆம் ஆண்டு 'காதலன்' என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்தனர். இவர்களது கூட்டணியில் வந்த மின்சார கனவு, மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

இந்நிலையில் தற்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AR Rahman Prabhu Deva movie update


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->