தனது விபரீத ஆசையை கூறிய அஞ்சலி.! இதெல்லாம் ஒரு ஆசையா? கிண்டல் செய்யும் ரசிகர்கள்.!
Anjalis special wish
நடிகர் ஜெய்யுடன் நடித்த எங்கேயும் எப்போதும் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்திருப்பவர் அஞ்சலி. தற்போது படவாய்ப்புகள் குறைந்ததால் அவரும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார்.
லேசான கவர்ச்சியுடன் குடும்பப்பாங்கான கேரக்டரில் அஞ்சலி நடித்த ‘மாப்பிள்ளை சிங்கம்’ ஓரளவுக்கு அவருக்கு கை கொடுத்தாலும், அஞ்சலியின் திறமையை உணர்ந்து கொள்ளும் அளவிற்கு கதை ஏதும் அமையவில்லை என்பதே உண்மை. தற்போது பட வாய்ப்புகளை பெற அஞ்சலி சமூக வலைதளப் பக்கங்களில் சற்று கூடுதல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.
அவர் மிகவும் தைரியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அஞ்சலியின் பெயர் தமிழ் சினிமாவில் பதியவில்லை. முன்பெல்லாம் அஞ்சலியின் இணையதள பக்கத்தில் மிகவும் கூலான புகைப்படங்களை காண முடியும். ஆனால், தற்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றார்.
இந்த நிலையில், நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் நடனமாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில், "கொரோனா முடிந்ததும் தெருவில் இறங்கி நடனமாடுவது தான், எனது ஆசை" என்று தெரிவித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும், ஏன்மா இதெல்லாம் ஒரு ஆசையா?மா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.