ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டாரா அமலாபால்.? உண்மையை போட்டுடைத்த கணவர் அமலாபாலின் மேனேஜர்.!
amala paul second marraige about his manager
தமிழில் கிரீடம், தெய்வ திருமகன், தேவி 2 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ஏ.எல். விஜய். இவர் மைனா படத்தில் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமான அமலா பாலை கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்துக்கு பின் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு சினிமா என மீண்டும் அமலாபால் பிஸியானார் சமீபத்தில் இவர் நடித்த ஆடை படம் வெளியானது. இதையடுத்து ஏ.எல் விஜய் படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டினார். இவரும் ஐஸ்வர்யா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரவுநேர பார்ட்டி, ஆண் நண்பர்கள் பழக்கம் என சமீபகாலமாக நடிகை அமலா பாலின் அக்டிவிட்டீஸ் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றது.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டு ஒரு பாடகரை காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அமலாபால் தன் காதல் குறித்து எவ்வித செய்தியும் வெளியிடவில்லை. இந்நிலையில், பாடகர் பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் திருமணம் செய்துகொண்டதாக புகைப்படம் வெளியிட்டார்.
அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், Wedding Throwback என்னும் குறிப்பிட்டிருந்தார். பாவ்னிந்தர் சிங் மும்பையை சேர்ந்த பாடகர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படத்தை நீக்கிவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அமலாபாலின் மேனேஜர் இந்த புகைப்படங்கள் குறித்து விளக்கமளித்ததாவது , “அமலாபால் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என பரவி வரும் தகவல் வெறும் வதந்தி. இன்ஸ்டாகிராம் பக்கத்தில்அமலாபால் திருமணம் செய்து கொண்டதாக வெளியான புகைப்படங்கள் மும்பையில் நடந்த ஈவன்ட் ஒன்றில் எடுக்கப்பட்டவை. இதை எதற்காக பாவ்னிந்தர் இன்ஸ்டாவில் பகிர்ந்தார் என தெரியவில்லை. திருமணம் என்பது அமலாபாலின் தனிப்பட்ட விஷயம். தற்போது பரவி வரும் செய்திக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை" என தெரிவித்தார்.
English Summary
amala paul second marraige about his manager