பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபத்து மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


தனுஷ் நடித்த அசுரன் படத்தில் கதாநாயகியாக நடித்த மலையாள பட நடிகை மஞ்சு வாரியர். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அசுரன் படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதையடுத்து  அவர் தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். அதில் சதுர் முகம் என்ற படத்தில் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு நடிகை மஞ்சுவாரியர் வில்லங்களுடன் மோதும் காட்சி ஷூட் செய்யப்பட்டது. அப்போது அபாயகரமான ஸ்டண்ட் காட்சிகள் இருக்கிறது மஞ்சு வாரியருக்கு பதிலாக டூப் போட்டுக்கொள்ளலாம் என ஸ்டண்ட் இயக்குனர் இயக்குனர் இடத்தில் ஆலோசனை கூறியுள்ளார். ஆனால், என்னுடைய சண்டை காட்சிகளில் நான் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக மஞ்சு வாரியர் கூறியதால் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமலேயே மஞ்சு வாரியரே நடித்தார். 

அப்போது மேலே இருந்து கீழே குதிப்பதுபோன்ற ஒரு காட்சி ஷூட் செய்யப்பட்டது, அதில் நடிக்க பாதுகாப்பு கயிறு கட்டிக்கொண்டு குதித்தார், அப்போது நடந்த விபத்தில் மஞ்சு வாரியருக்கும் பலமான அடிபட்டது. காலிலும் இடுப்பு பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டன. கீழேயே விழுந்த மஞ்சு வலியால் துடி துடிக்க, படக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து அந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. வருகிற 12 ஆம் தேதி மஞ்சுவாரியர் நடன நிகழ்ச்சி ஓன்றில் கலந்து கொள்வதாக கமிட் ஆகி இருந்தார். ஆனால் தற்போதுஅந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு மஞ்சுவாரியர் எழுதி அனுப்பி உள்ள கடிதத்தில் டாக்டர்கள் எனது காலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என கூறியுள்ளதால் என்னால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என கூறியுள்ளார். இதனால் காரணமாக அந்த நடன நிகழ்ச்சியை ரத்து செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress manju warrior accident in shooting spot


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->