அரசியல் தலைவர்களுக்கு படிப்பறிவு இல்லை.. நடிகை கஜோல் சர்ச்சை பேச்சு.! - Seithipunal
Seithipunal


அரசியல் தலைவர்கள் குறித்து பேசிய நடிகை கஜோலின் கருத்து சர்ச்சையாகி உள்ளது.

இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் தற்போது 'தி டிரையல்' என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் குறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடிகை கஜோல் பேட்டியளித்துள்ளார்.

அதன்படி, இந்த  நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது நாட்டில் மாற்றம் மெதுவாக உள்ளது. நாம் நமது கலாச்சாரம் மற்றும் சிந்தனை செயல்களில் மூழ்கி உள்ளோம். கல்வி அறிவில்லாத அரசியல் தலைவர்கள் நம்மிடம் உள்ளனர் என தெரிவித்திருந்தார்.


இதனையடுத்து நடிகை கஜோலின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் சிலர் ஆதரவாகவும், விமர்சனங்களையும் தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து இது குறித்து விளக்கம் அளித்த நடிகை கஜோல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நான் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றி மட்டுமே கருத்து கூறினேன். எனது நோக்கம் எந்த ஒரு அரசியல் தலைவர்களையும் இழிவு படுத்துவது அல்ல. மேலும் நமது நாட்டை சரியான பாதையில் வழிநடத்தும் சில சிறந்த தலைவர் நம்மிடம் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Kajol speech about political leaders


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->