யாரும் குடிக்காதீங்க அது கெட்ட பழக்கம்.. ஆனால் நான் குடிப்பேன் - நடிகர் விஜய் சேதுபதி.!
Actor Vijay sethupathi speech about drunk in college function
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்த உலகில் யாரும் தோற்றுபோவதும் இல்லை. யாரும் வெற்றி பெறுவதும் இல்லை. அந்தந்த சமயங்களில் நடக்கும் ஒரு சிறிய செயல்தான் மட்டும் தான்.
அதனால் வெற்றியோ தோல்வியோ வாழ்க்கையில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். நான் 12ம் வகுப்பில் குறைவாக தான் மார்க் வாங்கினேன். சென்னையில் லயோலா உள்ளிட்ட 3 முக்கிய கல்லூரிகளில் சேர்வதற்காக அப்ளிகேஷன் வாங்கினேன் ஆனால் என்னால் சேர முடியவில்லை.
தொடர்ந்து பேசிய அவர் நான் மார்க் குறைவாக எடுத்த அன்று இரவு என்னுடைய அப்பா வீட்டில் குடித்துக் கொண்டிருந்தார் என்று கூறியதும் மாணவர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். இதுக்கெல்லாம் கை தட்டாதீர்கள். அது கெட்ட பழக்கம் அவங்க அப்படி பழகிட்டாங்க. அதை ஸ்டைல் என நினைக்காதீர்கள். இப்படிப் பேசுவதால் நான் குடிக்க மாட்டேன் என்று நினைக்க வேண்டாம் நானும் குடிப்பேன் என்று கூறியுள்ளார்.
English Summary
Actor Vijay sethupathi speech about drunk in college function