குழந்தையை பாதுகாக்க 5 லட்சமா? - ரசிகர்களை வாய்பிளக்க வைத்த நடிகர் ராம்சரண்.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவருடைய மனைவி உபாசனா. திருமணமாகி சுமார் 11 வருடங்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்த இந்தத் தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. 

இந்தக் குழந்தைக்கு கிளின் காரா எனப் பெயரிட்டுள்ளனர். அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் வாரிசுதான் உபாசனா. இந்த நிலையில் ராம்சரண் சினிமாவிலும், உபாசனா மருத்துவமனை நிர்வாகத்திலும் பிஸியாக இருப்பதால் தங்களது குழந்தையைப் பார்த்துக் கொள்ள கேர் டேக்கர் ஒருவரை நியமித்துள்ளனர்.

அவருடைய பெயர் சாவித்ரி. இவர் இதற்கு முன்பு பாலிவுட் நடிகை கத்ரீனா உள்ளிட்ட சில பிரபலங்களின் குழந்தைகளைப் பராமரித்தவர். இவரைத்தான் தங்கள் குழந்தையைப் பராமரிக்க நியமித்துள்ளனர் ராம்சரண்- உபாசனா ஜோடி. இவருக்கு மாதம் ஐந்து லட்ச ரூபாயை சம்பளமாகக் கொடுத்து வருகின்றனர். இந்தத் தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor ramsaran baby care taker salry 5 lakhs


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->