இந்துத்துவா குறித்து சர்ச்சை கருத்து.. பிரபல கன்னட நடிகர் கைது.!
Actor Chetan kumar arrested for controversy tweet about Hindus
இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கன்னட நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சேத்தன் குமார். இவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் 'இந்துத்துவா கட்டமைப்பு பொய்களின் அடிப்படையில் உள்ளது'. என பதிவிட்டுள்ளார். இவருடைய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், பஜ்ரங் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், பஜ்ரங் அமைப்பை சேர்ந்த சிவகுமார் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று நடிகர் சேத்தன்குமரை பெங்களூரில் வைத்து கைது செய்தனர்.
English Summary
Actor Chetan kumar arrested for controversy tweet about Hindus