போண்டா மணிக்கு சிகிச்சைக்கு வைத்திருந்த ரூ.1 லட்சம் மோசடி.. கூடவே இருந்து குழிப்பறித்த வாலிபர்.!
1 lakh rupees fraud kept for treatment at bonda mani
தமிழ் சினிமாவில் மருதமலை, சுந்தரா ட்ராவல்ஸ், வின்னர், ஜில்லா மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட நிறைய திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் போண்டாமணி. கடந்து சில தினங்களாக இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவருக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்துள்ளது இதனையடுத்து தற்போது டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் போண்டாமணிக்கு மருத்துவ சிகிச்சைக்கு செலவு செய்ய பொருளாதார வசதி இல்லாமல் தவித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியது.
இதனையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மாசுபிரமணியன் போண்டாமணியை மருத்துவமனையில் சந்தித்து மருத்துவ செலவை தமிழக அரசே ஏற்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும், தனுஷ் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களும் பண உதவி அளித்தனர்.
இந்த நிலையில் நடிகர் போண்டா மணி சிகிச்சையில் இருந்து திரும்பிய நிலையில், அவருக்கு உதவி செய்வது போல் ராஜேஷ் பிரித்தீவ் என்ற இளைஞர் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் போண்டா மணியின் மனைவி மாதவி மருந்து வாங்கி வர ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார். அந்த நபர் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.1 லட்சத்திற்கு நகை வாங்கிக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து நடிகர் போண்டா மணியின் மனைவி போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் 1 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் விழுப்புரத்தில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
1 lakh rupees fraud kept for treatment at bonda mani