ஆன்லைனில் பெண் மருத்துவர் முன்பு நிர்வாணமாக நின்ற வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


நமது அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் சுகாதாரத்துறை சார்பில் 'இ சஞ்சீவினி' என்ற ஆன்லைன் மருத்துவ பரிசோதனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்தின் மூலம் இணையதளத்தில் நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயணப்பெறுகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கேரளாவில் உள்ள பத்தனம்திட்டை மாவட்டம் கோன்னி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் வழக்கம் போல் ஆன்லைன் மருத்துவ ஆலோசனையில் ஈடுபட்டு, நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். 

அப்போது, ஆன்லைனில் சிகிச்சை பெற வந்த திருச்சூர் பகுதியைச் சேர்ந்த முகம்மது சுகைப் என்ற வாலிபர் திடீரென தனது ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர் உடனடியாக ஆன்லைன் இணைப்பை துண்டித்தார். 

இதையடுத்து, அந்த பெண் மருத்துவர் சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் மற்றும் ஆரன்முளா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆன்லைனில் மருத்துவர் முன்பு நிர்வாணமாக நின்ற முகம்மது சுகைப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man arrested for naked in front of woman doctor during online medical consultation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->