இன்று ஒரு நாள் மட்டும் தமிழகம் உள்ளிட்ட 24 மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் கொள்முதல் நிறுத்தம்.!!
Petrol and diesel purchase stop in 24 states
மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ள நிலையில், சில்லரை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தியும், இன்று ஒருநாள் நாள் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்தப்படுவதாக டெல்லி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து இதுவரை கமிஷன் தொகை உயர்த்தப்படவில்லை எனவும், அதை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் டெல்லி பெட்ரோல் டீசல் விலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட 24 மாநிலங்களில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாளர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்றும் வெளியான தகவலை அம்மாநில பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது. எண்ணெய் கிழங்குகளில் இருந்து எரிபொருள் கொள்முதல் ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்ங்கள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Petrol and diesel purchase stop in 24 states