பிரான்ஸில் வீசும் மல்லிகை வாசம்..? பெண் போலீசார் கட்டாயமாக பூ வைக்க வேண்டுமா? மலர்களின் மகிமை அங்கு தெரிந்துள்ளது, இங்கு தெரிந்தும்..
தலையில் பூ மாலை அணிந்து நின்ற பிரான்ஸ் நாட்டு பெண் காவல்துறை அதிகாரி..
ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலய தேர்திருவிழாவில் தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் போலீஸ் அதிகாரிகளை பார்த்து பலர் வியந்துள்ளனர், அத்துடன் நம் தமிழ் மாடல் அழகிகளை பார்த்து பலர் கேள்வியும் கேட்டுள்ளனர்.
"எனக்கு கொஞ்சும் கொஞ்சும் தான் தமிழ் தெரியும் " என வெட்டி சீன் போடும் நம்ம பெண்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் போது கடமையில் ஈடுபட்ட பெண் போலீஸ் தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்டனர்.
பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவில் பாரிஸ் வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் திருவிழாவில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் அதிகாரிகள், தமிழ்ப்பெண்கள் அணிவது போல தலையில் பூமாலை அணிந்து காணப்பட்டனர்.
இதனை பார்த்து தமிழர்கள் ஆச்சரியமடைந்துள்ளதுடன் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்து தலையில் பூ வைத்து செல்ல விரும்பாத சில தமிழ் பெண்கள் இவர்களை பார்த்தாவது தம்மை மாற்றிக்கொண்டு தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பையும் பெருமையையும் புரிந்துகொள்ளவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் போது பல வேற்று இனத்தவர்கள் தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்துநின்றனர் என்பது குறிபிடதக்கது..
உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.
அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
பூக்களின் பயன்கள்..
ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
மகிழம்பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
வில்வப்பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
சித்தகத்திப்பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். தாழம்பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
தாமரைப்பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
கனகாம்பரம்பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.
தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.
பூக்களைச் சூடும் முறை..
பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.
மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.
மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும். முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம். உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.
பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்..
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது. தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும்.
ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும். மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.
பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது. மனமாற்றத்துக்கு உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.