திருமண பந்தத்தை வாழ்நாள் முழுவதும் பராமரிக்கும் தாம்பத்தியம்.!!
Couple enjoy is good for health and wealth
தாம்பத்தியம் கணவன் மனைவி உறவுகளை நெருக்கமாக்கும் விஷயமாகும். இந்த தாம்பத்திய வாழ்க்கையானது சமீப காலமாக குறைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரியவருகிறது. மேலும், கடுமையான வேலை, மன அழுத்தம், பொருளாதார இலக்கு, இணையதள தாக்கம், குழந்தைகளின் வளர்ப்பில் இருக்கும் சவால் என்று பல காரணங்கள் இதற்கு இருக்கிறது. தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும் பட்சத்தில், திருமண உறவுகளின் முறிவு மற்றும் பிற பிரச்சனைகளையும் ஏற்படுத்த அதிகளவு வாய்ப்புள்ளது.
திருமணத்திற்கு பின்னான தாம்பத்தியம் என்பது வாழ்க்கையின் முக்கியமான ஒன்றாகும். தம்பதிகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மற்றும் சிறிய சண்டைகள் என அனைத்தையும் புறந்தள்ளி தம்பதிகள் அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும். இப்போதைய காதல் என்பது மோகத்திற்குள் நுழைந்துள்ளது. இன்றுள்ள இளம் தலைமுறை காமத்திற்கு அதிகளவு அடிமையாகி வருகின்றனர். பிற்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பெரும்பாலானோர் சிந்தனை செய்வதே இல்லை. தாம்பத்தியம் என்பது மனித உறவுகளை தழைக்க வைக்க உதவும் மாயலோகம் ஆகும்.
அன்பால் இணைந்து ஈருடல் மேற்கொள்ளும் இன்பமான தாம்பத்தியம் வாழ்க்கை முழுவதும் அர்த்தத்தை அளிக்கும். இவர்களின் பிள்ளைகளை எதிர்கால தலைமுறையாகவும், சந்ததியாகவும் வளர்க்கின்றனர். இப்போதுள்ள சூழ்நிலையில் ஒன்றாக பிறந்த உடன்பிறப்புகள் ஒருமித்த கருத்துடன் இல்லாத சூழ்நிலையில், மாறுபட்ட கலாச்சாரத்தை கொண்ட தம்பதிகள் முரண்களை ஏற்று வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலைகளில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட தோற்றத்தில் உள்ள நிலையில், மனிதனின் மரபணுவும் வேறு வேறே.. எதிர்பாலின ஈர்ப்புகளும் சில நேரத்தில் சலிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. காமம், பாசம், நேசம், அன்பு என்ற விசயம் மட்டுமே கணவன் - மனைவியை தனது வாழ்நாள் வரை ஈர்ப்புடன் சேர்த்து வருகிறது.
ஆணாகவும், பெண்ணாகவும் தனித்தனியே இருக்கும் நேரத்தில் இனம்புரியாத தேடல் இருக்கும். இந்த தேடல் திருமண பந்தத்திற்கு பின்னர் மறைத்து போகும். சின்னசின்ன செல்ல சண்டைகள், அரவணைப்பு, அன்பு, பாசம், முத்தம், தாம்பத்தியம் என்று ஆண்மையையும், பெண்மையையும் உணர வைக்கும். தொட்டவுடன் உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல் இருபாலருக்கும் ஈர்ப்பு, தொடர் முத்தத்தில் காம வேட்கை புழியல் போல கிளம்ப, தம்பதிகள் சூறாவளிகள் போல தாம்பத்தியத்திற்கு தயாராகிறார்கள். இந்த அன்பு திருமண பந்தத்திற்கு பின்னர் தன்னம்பிக்கையை அதிகரிக்கும், தன்னை உணர செய்யும், மன அழுத்தத்தை குறைக்கும்.
பணியிடங்களில் தம்பதிகள் சந்திக்கும் மன அழுத்தங்கள், மன இறுக்கங்களை தாம்பத்தியம் சரி செய்கிறது. முதல்நாள் அன்பான தாம்பத்தியம், மறுநாள் பணிகளை மகிழ்ச்சியுடன் தொடர வழிவகை செய்யும். தம்பதிகளுக்குள் புரிதலை ஏற்படுத்தி, தங்களின் அன்பை பரிமாறிக்கொள்ள தாம்பத்தியம் உதவி செய்கிறது. தாம்பத்தியம் வைதுக்கொள்கையில் தம்பதியின் உடல் சக்தி செலவாகி, மனது அமைதியாகிறது. தாம்பத்தியம் மனம் மற்றும் உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதய நோய் பிரச்சனைகளை குறைத்து, இரத்த அழுத்தத்தை சரிசெய்து, உயர் இரத்த அழுத்தத்தை சரிசெய்து, நல்ல தூக்கத்தை ஏற்படுத்துகிறது.
தாம்பத்தியம் உடல் ரீதியாக மட்டுமல்லாது உளவியல் ரீதியாகவும் அதிகமான பலன்களை தருகிறது. நமது மன மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. தாம்பத்தியதால் ஆண்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்புகள் குறைகிறது. பெண்களின் மனதை உற்சாகப்படுத்தி, அவர்களின் ஆற்றலை அதிகரிக்கிறது. குழந்தைகளின் நிகழ்விற்கு முதற்படி மற்றும் முக்கிய படியாக தாம்பத்தியம் அமைக்கறியாது. தம்பதிகள் தாம்பத்தியத்தில் அவ்வப்போது கவனம் செலுத்தி வந்தால் உடல்நலமும், மனநலமும், இல்லறமும் சிறக்கும்..
Tamil online news Today News in Tamil
English Summary
Couple enjoy is good for health and wealth