மதுரை மண்ணில் பிறந்த சுந்தர் பிச்சைக்கு அடித்த ஜாக்பாட்! எவ்வளவு தெரியுமா?
சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றபோது அளிக்கப்பட்ட பங்குகளின் மதிப்பு அதிகளவில் உயர்ந்துள்ளது.
தமிழ் நாட்டின் மதுரை மாவட்டதில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. அம்மா - லட்சுமி, அப்பா - ரகுநாத பிச்சை, சென்னை ஜவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு, வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம், 2004-ஆம் ஆண்டில் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை இப்பொது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ. இது எல்லோருக்குமே தெரிந்த தகவல் தான்.
கூகுள் நிறுவனத்தின் தலைவரான தமிழர் சுந்தர்பிச்சை, கடந்த 2015-ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த போது ஆல்பெபெட் இங்க் நிறுவனம் சுமார் மூன்றரை லட்சம் பங்குகளை சுந்தர் பிச்சைக்கு வழங்கியது.
அந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு அதிகளவில் உயர்ந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றபோது அளிக்கப்பட்ட பங்குகளின் மதிப்பு உயர்வால் சுந்தர் பிச்சைக்கு ரூ.2500 கோடி கிடைத்துள்ளது.
English Summary
sundar pichai shares increased