பெருவில் அரசுக்கு எதிரான போராட்டம் - 17 பேர் பலி.! 3 நாட்கள் ஊரடங்கு அமல்
17 killed in Anti government protests in Peru and 3 days of curfew imposed
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கடந்த டிசம்பர் மாசம் ஆதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து அந்நாட்டின் புதிய அதிபராக, துணை அதிபராக இருந்த பெண் தலைவர் டினா பொலுவார்டே பதவி ஏற்றார்.
இந்நிலையில் பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்ததற்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பெட்ரோ காஸ்டிலோவை விடுவிக்க கோரியும், தற்போதைய அதிபர் டினா பொலுவார்டே பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் ஜூலியாக்கா விமான நிலையத்திற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றதால், அங்கு பாதுகாப்பு படையினர் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
இந்தப் போராட்டத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து, பெருவில் அடுத்த 3 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அந்நாட்டின் அதிபர் டினா பொலுவார்டே உத்தரவிட்டுள்ளார்.
English Summary
17 killed in Anti government protests in Peru and 3 days of curfew imposed