இடி, மின்னலுடன் மிரட்ட வரும் மழை.. டெல்டா மக்களே உஷார்.!! வானிலை மையம் வார்னிங்.!!
Rain in tamilnadu on next 2 days
Tamilnad தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடி கடந்த வாரத்தோடு முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலெனக் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பனிப்பொழிவுடன் வறண்ட வானிலை தொடங்கியுள்ள நிலையில் நீலகிரியில் தற்போது உரை பணி நிலவி வருகிறது. வரும் நாட்களில் மைனஸ் டிகிரிக்கு சென்று உரைப்பணி தொடர கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு, அதாவது இன்றும், நாளையும் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னழுக்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
English Summary
Rain in tamilnadu on next 2 days