மிஸ்டு கால் மூலம் பழக்கம்... பிளஸ்-2 மாணவி பலாத்காரம்... திருமணமான வாலிபர் கைது...! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி 12ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த திருமணமான வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பழைய சிறுவங்கூர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (27). இவர் சம்பவத்தன்று 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியின் செல்போன் எண்ணுக்கு மிஸ் கால் கொடுத்துள்ளார். இதையடுத்து மாணவி அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன் மூலம் இவர்களிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டிற்கு வந்த அன்பரசன், மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாணவியுடன் அன்பரசன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பெற்றோர் இதுகுறித்து மாணவியிடம் விசாரித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பெற்றோர் அன்பரசன் பற்றி விசாரித்ததில், ஏற்கனவே அவருக்கு திருமணம் நடந்திருப்பதை மறைத்து மாணவியுடன் பழகி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அன்பரசனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man arrested for Raped 12 class girl in kallakurichi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->