காயங்களுடன் மர்ம முறையில் வீட்டில் இறந்து கிடந்த பெண்.! தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் வீட்டில் பெண் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சாமி. இவரது மனைவி செல்லம்மாள்(65). இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சாமி இறந்து விட்டதால், செல்லம்மாள் உசிலம்பட்டி-வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். மேலும் இவரது மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் செல்லம்மாள் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது செல்லம்மாளின் கழுத்து மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செல்லம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லம்மாள் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman found dead mysteriously at home with injuries in madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->