கர்நாடகாவில் 22 காவலர்களை கொன்ற வீரப்பன் கூட்டாளி சைமன் உயிரிழந்தாரா.?
கர்நாடகாவில் 22 காவலர்களை கொன்ற வீரப்பன் கூட்டாளி சைமன் உயிரிழந்தாரா.?
கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பனின் நண்பர் சைமன் தற்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
கர்நாடகாவில் 1993ம் ஆண்டு வீரப்பன் கூட்டாளிகள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதல் நடத்தியதில், கர்நாடகாவின் 22 போலீசார் கொல்லப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியாக கர்நாடக போலீசாரால் சைமன் அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து பல போராட்டங்களை தாண்டி அவரை கைது செய்து பெங்களூரு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர், நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதனையடுத்து சைமன் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சைமன் உயிரிழந்து விட்டதாக கர்நாடக சிறை நிர்வாகம் இன்று காலை அறிவித்துள்ளது.
மேலும் கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தருமபுரி மாவட்டம் பாடி கிராமத்தில் அதிரடிப்படையினரால் வீரப்பன் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
veerappan importent partner sayman died