அதிமுக அலுவலகத்தை கைப்பற்றிய அமமுக?! பரபரப்பில் அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றதால், அம்மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீரபாண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள இந்த அதிமுக அலுவலகத்தில், அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் கூட்டத்தை நடத்த உரிமை கோரி காவல்துறையிடம் உரிமை கோரப்பட்டு இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த அலுவலகத்தில் எந்தவித கூட்டத்தையும் நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்காமல் மறுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சசிகலாவின் கட்டுப்பாட்டில் அலுவலகம் இருப்பதால், அங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பூத் கமிட்டி கூட்டம் நடத்தி உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 

மேலும் அதிமுக கட்டடத்தை கைப்பற்ற அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த விவகாரம் குறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சற்று முன்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni ADMK Office AMMK Meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->