திருமணம் செய்ய மறுத்த காதலன்..இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்  பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார்.

இதனை அடுத்து, அந்த வாலிபருக்கு காவல்துறையினர் வேலை கிடைத்தது.  இவர்களின் காதல் விவகாரம் அந்த வாலிபரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவரை கண்டித்துள்ளனர். இதனால், அந்த வாலிபர் இளம்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால், அந்த இளம்பெண் விஷமருந்தின் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவருடன் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், திருமணம் செய்து கொள்ள முடியாது என சொல்லியதை அடுத்து மன உளைச்சலில் அந்த இளம்பெண் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teen attempted suicide


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->