என் பெயரில் போலி சமூக விரோதிகள்: தமிழகத்தில் அரங்கேற இருக்கும் சதி திட்டம்..? சற்று முன் ஸ்டாலின் அம்பலப்படுத்திய பகீர் தகவல்..!! - Seithipunal
Seithipunal


தனது பெயரில் தமிழகத்தில் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பதிவுகள் உலா வருவது குறித்து ஸ்டாலின் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், சமீப காலங்களில், ஒருசில சமூக விரோதிகள் என்னுடைய ‘ட்விட்டர்’ பக்கம் போலவே ஒரு போலி கணக்கை உருவாக்கி, என்னுடைய ட்விட்டரில் நான் சொல்லாத கருத்துக்களை நான் சொன்னது போலவும், தமிழ்ச் சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கக்கூடிய வகையிலும் ஒரு போலிப் பதிவை உருவாக்கி, அதனை வாட்ஸ்அப், முகநூல் மற்றும் பிற சமூக வலை தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்கள், எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்பினை குலைத்திடும் வகையிலும், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் தீய எண்ணத்துடனும் இந்த விஷமச் செயலை செய்து வருகின்றனர்.

இந்த சமூக விரோதிகள் இது போன்ற, நான் சொல்லாத கருத்துக்களை சொல்லியதாகவும், அந்தக் கருத்துக்களை சில தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது போலவும் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

இத்தகைய செயல் தகவல் தொழில் நுட்பச் சட்டம் பிரிவு 66(A)-ன்படியும், இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் படியும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே, என்னுடைய ட்விட்டர் பதிவு போலவே போலியாக உருவாக்கி போலிப்பதிவுகளை பதிவிட்டு, நான் சொல்லாத செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் போலி பதிவிட்டு வருபவர்கள், மீது உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அவர்களிடம் புகார் அளித்துள்ளேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin fake social media post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->