தேர்தலுக்கு ஊருக்கு போறீங்களா? உங்களுக்கான சிறப்பு ரயில்கள் இதோ..!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி வரும் ஏப்ரல் 19ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு மீறி நிறுவனங்கள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழக அரசு சார்பில் மக்களவைப் பொதுத் தேர்தலுக்காக பத்தாயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

 

அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து கோவை வரை தஞ்சாவூர் திண்டுக்கல் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து கோவைக்கு புறப்படும் ரயிலானது மறு மார்க்கத்தில் ஏப்ரல் 19 மற்றும் 21 ஆம் தேதிகளில் கோவையிலிருந்து சென்னைக்கு புறப்படுகிறது என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special train to Coimbatore for election


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->