விடிய விடிய கொட்டி தீர்க்கும் மழை - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
school and colleges holiday for rain
தமிழகத்தின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரம் அடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களின் உள் பகுதிகளில் பல இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களின் உள் பகுதிகளிலும் மழை பெய்து இருக்கிறது.
அந்த வகையில், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், இந்தத் தொடர் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதான் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிக், கல்லூரிகளுக்கும், நாகை மாவட்டத்தில் இரண்டு தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும், புதுச்சேரியில் உள்ள பள்ளிக், கல்லூரிகளுக்கு முதலமைச்சர் ரெங்கசாமி விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
school and colleges holiday for rain