சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் கூரை சரிந்த விபத்தில், பங்க் ஊழியர் ஒருவர் உயிரிழப்பு! 10 பேர் மருத்துவமனையில்..!
Saidapet petrol bunk terrace accident
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் காற்றுடன் கன மழை பெய்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் கனமழையின் காரணமாக பெட்ரோல் பங்கின் மேற்கூரையானது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது.
கனமழையின் காரணமாக பெட்ரோல் பங்க்கின் மேற்கூறையின் கீழ் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒதுங்கி இருந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்ததில் பங்க் ஊழியர் கந்தசாமி(53) உயிரிழப்பு என முதற்கட்ட தகவலில் வெளியாகி இருக்கிறது. 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியானது தற்போது வெளியாகியிருக்கிறது.
English Summary
Saidapet petrol bunk terrace accident