விடைபெறும் பருவ மழை - மகிழ்ச்சியில் மக்கள்.!
rain finished in tamilnadu
பொதுவாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்தில் முடிவடையும். இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ஆம் தேதிக்கு பிறகு விடைபெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த முறை வழக்கத்தை விட வரலாறு காணாத கனமழை வட மற்றும் தென் மாவட்டங்களில் பெய்தது. இதனால் பொதுமக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, ”இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். மேலும், நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் விடைபெறும் தருவாயில் வந்துவிட்டதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காலம் ஜனவரி வரை நீடிக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன் படி, பருவமழை தென் மாவட்டங்களில் பெய்தது. இதன் தொடர்ச்சியாக இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு படிப்படியாக மழை குறையத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
rain finished in tamilnadu